மதுரையில் மாற்றுக்கடைகள் கட்டிக்கொடுத்தும் வெளியேற மறுத்தவர்களின் கடைகள் அகற்றம்.!

மதுரையில் மாநகராட்சி சார்பில் மாற்றுக்கடைகள் கட்டிக்கொடுத்தும் மீனாட்சியம்மன் கோவில் எதிரே புதுமண்டபம் பகுதியில் இருந்து வெளியேற மறுத்தவர்களின் 32 கடைகள் அகற்றப்பட்டன.

புதுமண்டபத்தின் சிற்பங்களை பாதுகாக்கும் நோக்கில் அங்கிருந்த கடைகளை அகற்ற கோவில் நிர்வாகம் உத்தரவிட்டது. அவர்களுக்கு மாநகராட்சி சார்பில் குன்னத்தூர் சத்திரத்தில் கடைகளும் கட்டிக் கொடுக்கப்பட்டன.

எனினும் 32 கடைக்காரர்கள் கடைகளை அகற்ற மறுத்து வந்தனர். இது தொடர்பான வழக்கில் கடைகளை அகற்ற உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், அவற்றை போலீஸ் பாதுகாப்புக்கு மத்தியில் கோவில் ஊழியர்கள் அகற்றினர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.