சீனாவில் கன மழை: 15 பேர் பலி| Dinamalar

பீஜிங் : சீனாவில் கன மழையால் 15 பேர் உயிரிழந்தனர். வெள்ளத்தில் மாயமான மூன்று பேரை தேடும் பணி நடக்கிறது.நம் அண்டை நாடான சீனாவின் தெற்கு பகுதியில் மூன்று நாட்களாக கன மழை பெய்து வருகிறது. கிராமங்கள் மட்டுமின்றி, நகரங்களிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

புஜியான் மாகாணத்தில் பெய்த மழையால், ஒரு கட்டடம் இடிந்து எட்டு பேர் உயிரிழந்தனர். யுனான் மாகாணத்தில் வெள்ளத்தில் சிக்கி ஐந்து பேர் இறந்தனர். குவான்க்ஸி என்ற இடத்தில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட மூன்று குழந்தைகளில் இருவர் உயிரிழந்தனர். ஒரு குழந்தை உயிருடன் மீட்கப்பட்டது. மேலும் மாயமான மூன்று பேரை தேடும் பணி தீவிரமாக நடக்கிறது. மீட்புப் பணிகள் முடுக்கி விடப்பட்டு உள்ளன. பாதிக்கப்பட்ட மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.