“பணி மாறுதலுக்கான கலந்தாய்வு என்பது சலுகை தான்; உரிமை கோர முடியாது” – சென்னை உயர் நீதிமன்றம்

பணி மாறுதலுக்கான கலந்தாய்வு என்பது சலுகை தான் எனவும், பணிமாறுதலை உரிமையாக கோர முடியாது எனவும் சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

பணியிடமாற்றம் பெற கலந்தாய்வுக்கு அழைக்கக் கோரி அரசுப்பள்ளி தலைமையாசிரியர் ஒருவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.எம் சுப்பிரமணியம், பணியிடமாற்றம், பணிநியமனம் என்பது அரசின் தனிப்பட்ட அதிகாரத்துக்கு உட்பட்டது என்று தெரிவித்தார்.

மேலும், அரசின் முடிவில் தலையிட முடியாது எனக் கூறி, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.