சீமான் படத்தை எரிக்க முயன்றதால் ஏற்பட்ட பரபரப்பு


தமிழகத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் படத்தை காங்கிரஸ் கட்சியினர் எரிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

விழுப்புரம் ஆட்சியர் அலுவலகம் எதிரே, மத்திய மாவட்ட இளைஞர் காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

இளைஞர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் ஸ்ரீராம் தலைமை தாங்கினார். விழுப்புரம் சட்டசபை தலைவர் பிரபாகரன் வரவேற்றார்.

சீமான் படத்தை எரிக்க முயன்றதால் ஏற்பட்ட பரபரப்பு

ஆர்ப்பாட்டத்தில், இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை அவதுாறாக பேசி வருவதாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானை கண்டித்து ஆர்ப்பாட்டக்காரர்கள் கோஷம் எழுப்பினார்கள்.

பின், சீமான் படத்தை எரிக்க முயன்றனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பொலிசார் அவர்களை தடுத்து நிறுத்தினார்கள்.

இதன் காரணமாக அந்த இடத்தை சுற்றிலும் பரபரப்பு நிலவியதை காண முடிந்தது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.