ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சியுடன் தொடங்குகிறது ஐபிஎல் இறுதி போட்டி

அகமதாபாத்:
சையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சியுடன் இன்று ஐபிஎல் இறுதி போட்டி தொடங்குகிறது.

இன்று நடக்கும் ஐபிஎல் இறுதி போட்டியை பிரதமர் நரேந்திரமோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் பார்த்து ரசிக்க உள்ளனர்.

15-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா கடந்த மார்ச் 26-ஆம் தேதி தொடங்கியது.10 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் மற்றும் பிளே-ஆப் சுற்று ஆட்டங்கள் நடைபெற்றன. அதன் முடிவில் ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ், அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன.

இன்று இரவு 8 மணிக்கு போட்டி தொடங்குவதற்கு முன்னதாக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது என்பது குறிபிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.