ரணிலின் அங்கீகாரத்தை தந்திரமாக பயன்படுத்தும் ராஜபக்சக்கள் – பேராசிரியர் சரத் விஜேசூரிய தகவல்


நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுடன் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கைக்கு அமைவாக ரணில் விக்ரமசிங்க அண்மையில் பிரதமர் பதவியை ஏற்க நடவடிக்கை எடுத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சரத் விஜேசூரிய இதனை தெரிவித்துள்ளார். இணைய ஊடகம் ஒன்றிடம் பேசிய அவர் இதனை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், 

முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச நாட்டிற்கு தொல்லையெனவும், தற்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்க சாபம் எனவும் அவர் இதன் போது குறிப்பிட்டுள்ளார்.

ரணிலின் அங்கீகாரத்தை  தந்திரமாக பயன்படுத்தும் ராஜபக்சக்கள் - பேராசிரியர் சரத் விஜேசூரிய தகவல்

ரணில் விக்ரமசிங்க பெரும் இராஜதந்திர அங்கீகாரம் பெற்ற அரசியல் தலைவர் எனவும், இந்த அங்கீகாரத்தை ராஜபக்சக்கள் தந்திரமாக பயன்படுத்தி வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசியலமைப்புக்கு முரணான ஆட்சி தொடர்பில்மகிந்த ராஜபக்சவுக்கு பிரதமர் பதவியை வழங்குவதற்காக அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கொண்ட ஒப்பந்தத்தில் பசில் ராஜபக்சவின் தொடர்பையும் பேராசிரியர் சரத் விஜேசூரிய வெளிப்படுத்தியுள்ளார்.

மேலும், நாமல் ராஜபக்சவுடன் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கைக்கு அமைவாக ரணில் விக்ரமசிங்க அண்மையில் பிரதமர் பதவியை ஏற்க நடவடிக்கை எடுத்ததாக இந்த கலந்துரையாடலில் பேராசிரியர் சரத் விஜேசூரிய வெளிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.  



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.