Tamil News Today Live: ஓராண்டில் 102 டன் போதைப்பொருள் பறிமுதல்” – அமைச்சர் மா.சு

Tamil Nadu News Updates: சென்னை மாநகராட்சிக்கு நிலுவையிலுள்ள சொத்து வரியில் கடந்த 15 நாளில் ரூ40 கோடி வசூலிப்பு.கடந்த ஏப்ரல் மாதம் முதல் இதுவரை ரூ220.64 கோடி சொத்துவரி வசூல் என சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்தார்.

ஐபிஎல் நிறைவு விழாவில் ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சி

அகமதாபாத், நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் ஐபிஎல் நிறைவு விழா இன்று நடைபெறுகிறது. விழாவில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தி நடிகர் ரன்வீர் சிங், முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்கள் உட்பட பலர் கலந்து கொள்ள உள்ளனர். கோப்பை வெல்லும் முனைப்பில் குஜராத் மற்றும் ராஜாஸ்தான் அணிகள் மோதுகின்றன.

பெட்ரோல், டீசல் அப்டேட்

சென்னையில் 7வது நாளாக பெட்ரோல் – டீசல் விலையில் மாற்றமில்லை. பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ102.63க்கும், டீசல் ஒரு லிட்டர் ரூ94.24க்கும் விற்பனையாகிறது.

மகாராஷ்டிராவில் ஒமிக்ரானின் துணை வகை தொற்று பாதிப்பு

மகாராஷ்டிராவில் முதல்முறையாக ஒமிக்ரானின் துணை வகை தொற்று பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட 7 பேரில் இருவர் வெளிநாடு சென்று வந்தவர்கள் என தகவல்.

மகளிர் டி20 – சூப்பர்நோவாஸ் அணி சாம்பியன்

மகளிர் டி20 சேலஞ்ச் இறுதிப்போட்டியில் வெலாசிட்டி அணியை 4 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சூப்பர்நோவாஸ் அணி சாம்பியன் பட்டம் பெற்றது. 166 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய வெலாசிட்டி 20 ஓவர்களில் 161 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி

Live Updates
09:16 (IST) 29 May 2022
ஐபிஎல் இறுதிப்போட்டியை பிரதமர் மோடி நேரில் காணவுள்ளதாக தகவல்!

இன்றிரவு 8 மணிக்கு அகமதாபாத்தில் நடைபெறவுள்ள ஐபிஎல் இறுதிப்போட்டியை பிரதமர் மோடி மற்றும் உள் துறை அமைச்சர் அமித்ஷா நேரில் காணவுள்ளதாக தகவல். குஜராத் மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றன.

08:54 (IST) 29 May 2022
இந்தியா – வங்கதேசம் இடையே மீண்டும் பயணிகள் ரயில் சேவை

இந்தியா – வங்கதேசம் இடையே இன்று முதல் மீண்டும் பயணிகள் ரயில் சேவை; கொரோனா பரவலால் இரண்டாண்டுகளுக்கும் மேலாக சேவை நிறுத்தப்பட்டிருந்தது

08:45 (IST) 29 May 2022
சாதிப் பெயர்களை நீக்கும் பணி தொடக்கம்

சிங்கார சென்னை 2.0 திட்டத்தில் சென்னை மாநகராட்சியில் தெரு பெயரில் உள்ள சாதிப்பெயர்களை நீக்கும் பணி தொடக்கம். சென்னை 171வது வார்டு பகுதியில் அப்பாவோ கிராமணி 2 ஆவது தெரு தற்போது அப்பாவு(கி) தெரு என மாற்றம்

08:30 (IST) 29 May 2022
தமிழகத்தில் போதை பொருட்கள் இருக்க கூடாது – அமைச்சர் மா.சு

தமிழகத்தில் போதை பொருட்கள் இருக்க கூடாது என்பதே முதல்வர் மு.க.ஸ்டாலினின் எண்ணம். கடந்த ஆண்டில் ரூ6 கோடி மதிப்பிலான 102 டன் போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

08:23 (IST) 29 May 2022
நீலகிரி கோடை விழா இன்றுடன் நிறைவு

நீலகிரியில் கோடை விழா இன்றுடன் நிறைவடைகிறது. இறுதியாக பழக்கண்காட்சியுடன் கோடை விழா நிறைவுபெறுகிறது.

07:55 (IST) 29 May 2022
கோவை ஆனந்தஸ் உணவகங்களில் 2வது நாளாக சோதனை

கோவை ஆனந்தஸ் உணவக குழுமத்திற்கு சொந்தமான இடங்களில் 2 ஆவது நாளாக வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.