சேலம் மாவட்டத்தில் தக்காளி பெட்டியை திருடிய இளைஞர் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகே பெருமாகவுண்டம்பட்டி பகுதியைச் சேர்ந்த சங்கர் காய்கறி கடை வைத்துள்ளார்.
இந்த கடையின் முன் வைக்கப்பட்டு இருந்த இரண்டு தக்காளி பெட்டிகளில், ஒரு தக்காளி இப்பெட்டியை காணவில்லை என்பதால் சிசிடிவி கண்காணிப்பு கேமராவை பார்த்த போது மர்ம நபர் ஒருவர் இரு சக்கர வாகனத்தில் தக்காளி பெட்டியை திருடி சென்றது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து கடை உரிமையாளர் சங்கர் மகுடஞ்சாவடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதையடுத்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் தக்காளி திருடி சென்ற வாகனத்தின் பதிவு எண்ணை வைத்து வெண்ணந்தூர் தங்கசாலை பகுதியை சேர்ந்த சின்ராஜ் என்பவரை கைது செய்துள்ளனர்.
இவர் ஏற்கனவே ஆப்பிள் பெட்டி திருடிய வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளியே வந்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து சின்ராஜை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்பு சிறையில் அடைத்தனர்.