ஆந்திராவில் சொத்துக்காக தந்தையை கார் ஏற்றி கொல்ல முயன்ற மகன் கைது.. பதற வைக்கும் சிசிடிவி காட்சி..!

ஆந்திராவில் சொத்துக்காக இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த தந்தையை காரில் மோதி கொலை செய்ய முயன்ற மகனை போலீசார் கைது செய்தனர்.

3 நாட்களுக்கு முன் அன்னமய்யா மாவட்டத்தில் சந்திரசேகர் ரெட்டி என்பவர் பிலேர் என்ற பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது, அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் அவர் படுகாயமடைந்தார்.

இது குறித்து சிசிடிவி காட்சி உதவியுடன் விசாரித்த போலீசார், சந்திர சேகரின் மகனான லட்சுமி பிரசாத், கொலை செய்ய திட்டமிட்டு விபத்தை ஏற்படுத்தி தப்பிச் சென்றதை கண்டுபிடித்தனர்.

நீண்ட நாட்களாக நிலவி வரும் சொத்துப்பிரச்சனை காரணமாக, தந்தையை கார் ஏற்றி மகன் கொல்ல முயன்றதாக போலீசார் கூறினர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.