குறைந்த விலையில் தங்கம் தருவதாக ஆசை காட்டிய கும்பல்.. 2 கிலோ அலுமினிய செயின்களை கொடுத்து ரூ.1 லட்சத்துடன் தலைமறைவு..!

கோவையில், குறைந்த விலைக்கு தங்கம் தருவதாகக் கூறி 2 கிலோ அலுமினிய குண்டுகளை கொடுத்து, பெண்ணிடம் ஒரு லட்ச ரூபாய் மோசடி செய்து தலைமறைவான மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை பாப்பநாயக்கன் பாளையம் பகுதியை சேர்ந்த இந்திராணியின் கடைக்கு வந்த 3 பேர், 3 மில்லி கிராம் அளவிலான தங்கத்தை கொடுத்து, தாங்கள் குறைந்த விலைக்கு தங்கம் தருவதாக கூறி ஆசை காட்டியுள்ளனர்.

இதனை நம்பிய அவர், ஒரு லட்ச ரூபாயை மர்ம நபர்களிடம் கொடுத்துள்ளார். பின்னர் அவர்கள் கொடுத்த செயினை சோதித்த போது, அவை அலுமினிய செயின்கள் என தெரிய வந்தது.

இதனையடுத்து நூதன முறையில் மோசடி செய்த 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.