காலையில் அறிவிப்பு; மாலையில் திரும்ப பெற்றது ஆதார் அமைப்பு!

இந்திய குடிமக்களின் அடிப்படை அடையாள ஆதாரமாக
ஆதார் கார்டு
உள்ளது. ஆனால் இதன் பாதுகாப்பு மீது பெரும்பாலோர் அதிகக் கவனம் செலுத்துவதில்லை. நிறைய இடங்களில் ஆதார் கார்டை நகல் எடுக்கின்றனர்.

அதேபோல வேலைக்குச் செல்லும் இடத்திலும் பல்வேறு இடங்களிலும் ஆதார் ஆவணத்தைக் கொடுத்து விடுகின்றனர். இதுபோன்ற நடவடிக்கைகள் ஆதார் உடைமையாளர்களுக்கு பிரச்சினையை ஏற்படுத்தலாம்.

இதுகுறித்து ஆதார் அமைப்பு (
UIDAI
) இன்று எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை விடுத்திருந்தது. அதில், எந்தவொரு நிறுவனத்திடமும் யாரும் தங்களது ஆதார் நகல்களைக் கொடுக்க வேண்டாம் என்று எச்சரிக்கை செய்திருந்தது. அதேபோல, பொது இடங்களில் ஆதார் கார்டை தேவையில்லாமல் டவுன்லோடு செய்ய வேண்டாம் என்றும் அறிவித்திருந்தது.

மிக முக்கியமாக, ஆதார் கார்டின் கடைசி நான்கு இலக்கங்களை மட்டும் காட்டும் மாஸ்க் ஆதார் கார்டைப் பயன்படுத்தும்படி ஆதார் அமைப்பு வலியுறுத்தியிருந்தது.

காலையில் வெளியிட்ட் இந்த அறிவிப்பு திரும்ப பெறப்படுவதாக ஆதார் அமைப்பு மாலையில் அறிவித்தது. ஆதார் கார்டை யாரும் நகல் எடுக்க வேண்டாம் என்ற தங்களது அறிவுறுத்தல் பொதுமக்கள் மத்தியில் தவறாக புரிந்து கொள்ளப்பட வாய்ப்புள்ளதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும், பொதுமக்கள் ஆதாரை வழக்கம் போல் பயன்படுத்தலாம் என்றும் ஆதார் அமைப்பு தெரிவித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.