சீனாவில் புதிதாக 54 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

பெய்ஜிங்,

சீனாவில் கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வந்தது. அந்நாட்டின் முக்கிய நகரங்களான பெய்ஜிங், ஷாங்காய், ஜிலின் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கொரோனா தொற்று வேகமாக பரவியது. உருமாறிய கொரோனா காரணமாக இந்த தொற்று பரவியதாக கூறப்படுகிறது.

இதை தடுக்க மிகத்தீவிரமான ஊரடங்கு கடுப்பாடுகளை சீன அரசு விதித்துள்ளது. இதன் காரணமாக அங்கு கொரோனா பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது. அந்த வகையில் கடந்த 24 மணி நேரத்தில் சீனாவில் புதிதாக 54 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 29 பேர் ஷாங்காய் பகுதியிலும், 14 பேர் பெய்ஜிங்கிலும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

அங்கு கொரோனாவால் புதிதாக உயிரிழப்புகள் ஏற்படவில்லை. சீனாவில் இதுவரை கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,226 ஆக உள்ளது. அதே சமயம் கடந்த 24 மணி நேரத்தில் 252 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். இதன் மூலம் அங்கு இதுவரை கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,15,860 ஆக அதிகரித்துள்ளது.


Related Tags :

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.