ராஜஸ்தான்: வாகன விபத்து – 4 பேர் பலி

ஜெய்பூர்,

ராஜஸ்தான் மாநிலம் சித்தோர்கர்-பிரதாப்கர் தேசிய நெடுஞ்சாலை உள்ளது. அதில் காா், ஜீப் மற்றும் சரக்கு வாகனங்கள் ஒன்றோறு ஒன்று மோதியது. அதில் காாில் இருந்த 1 மாத குழந்தை உள்ளிட்ட 4 பேர் சம்பவ இடத்திலேயே பாிதாபமாக உயிரிழந்தனர். 7 போ் காயம் அடைந்தனர்.

காயம் அடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். அதில் 2 போின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உயிாிழந்தவா்களின் உடலைகளை மீட்டு ஜெய்பூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் விபத்து குறித்து சரக்கு வேன் டிரைவரை கைது செய்தனர்.மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.