விவாகரத்துக்கு பின் குழந்தைகளுடன் சுற்றுலா சென்ற தம்பதி விமான விபத்தில் உயிரிழப்பு! புகைப்படம்


நேபாள விமான விபத்தில் உயிரிழந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் தொடர்பில் உருக்கமான தகவல் வெளியாகியுள்ளது.

மஸ்டாங் மாவட்டத்தில் 22 பேருடன் சென்ற விமானம் நேற்று விபத்தில் சிக்கியது.
விமான விபத்தில் உயிரிழந்த 14 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

மீட்கப்பட்ட உடல்கள் பிரேத பரிசோதனைக்காக தலைநகர் காத்மாண்டுவுக்கு எடுத்துச் செல்லப்பட உள்ளது.
விமானத்தில் பயணித்த அனைவருமே உயிரிழந்திருக்கலாம் என கருதப்படுகிறது.

விவாகரத்துக்கு பின் குழந்தைகளுடன் சுற்றுலா சென்ற தம்பதி விமான விபத்தில் உயிரிழப்பு! புகைப்படம்

இந்நிலையில் விமான விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் உயிரிழந்துள்ளனர்.
அதன்படி வைபவி என்ற பெண்ணிற்கும், அஷோக் என்பவருக்கும் திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் விவாகரத்து செய்து கொண்டனர்.

அப்போது அவர்களுக்கு விவாகரத்து வழங்கிய குடும்ப நீதிமன்றம், ஆண்டுக்கு 10 நாட்கள் இருவரும் இணைந்து குழந்தைகளுடன் சுற்றுலா சென்று வர வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.

இந்தநிலையில், நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இணங்க, நேற்று நேபாளத்தின் பொக்காராவிலிருந்து விமானத்தில் புறப்பட்ட இந்தியாவை சேர்ந்த அந்த 4 பேரும் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.