ராகேஷ் திகைத் மீது கருப்பு மை வீச்சு – 3 பேர் அதிரடி கைது!

கர்நாடக மாநிலம் பெங்களூரில், விவசாய சங்கத் தலைவர் ராகேஷ் திகைத் மீது மர்ம நபர்கள் கருப்பு மை வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

புதிய மூன்று வேளாண் சட்டங்களை, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு, விவசாயிகளின் தொடர்பு எதிர்ப்புகளுக்கு அடிபணிந்து திரும்ப பெற்றது. விவசாயிகள் நடத்திய போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்தவர், பாரதிய விவசாய சங்கத் தலைவர் ராகேஷ் திகைத். இவரது தலைமையில் லட்சக் கணக்கான விவசாயிகள் போராடியதைத் தொடர்ந்து மூன்று வேளாண் சட்டங்களும் ரத்து செய்யப்பட்டன.

இந்நிலையில், கர்நாடக மாநிலம் பெங்களூருக்கு, பாரதிய விவசாய சங்கத் தலைவர்
ராகேஷ் திகைத்
வந்திருந்தார். அங்கு நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றிற்கு பிறகு, அவர் செய்தியாளர்களை சந்திக்க தயாரானார். அப்போது அடையாள தெரியாத மர்ம நபர்கள், ராகேஷ் திகைத் மீது கருப்பு மை வீசினர். மேலும், மைக்கால் அவர் மீது தாக்குதல் நடந்ததாகவும் கூறப்படுகிறது. இதை அடுத்து அந்தப் பகுதியில் பெரும் பதற்றம் நிலவியது.

இது குறித்து பாரதிய விவசாய சங்கத் தலைவர் ராகேஷ் திகைத் செய்தியாளர்களிடம் கூறுகையில், “எங்களது நிகழ்ச்சிக்கு உள்ளூர் காவல் துறையினர் எந்தப் பாதுகாப்பும் வழங்கவில்லை. இந்த தாக்குதல், மாநில பாஜக அரசுடன் ஒத்துழைப்புடன் நடந்துள்ளது” என குற்றம் சாட்டினார். இதற்கிடையே இந்த விவகாரம் தொடர்பாக மூன்று பேர் கைது செய்யப்பட்டு உள்ளதாகவும், அவர்களிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.