காரில் “பிரேக்”கிற்கு பதிலாக ஆக்சிலேட்டரை அழுத்திய பெண்மணி.. தூக்கி வீசப்பட்ட பெண்..

கேரள மாநிலத்தில், கணவரிடம் கார் ஓட்ட பயிற்சி பெற்று வந்த பெண்மணி, பிரேக்கிற்கு பதிலாக ஆக்சிலேட்டரை அழுத்தியதால் சாலையோரம் நடந்து சென்ற பெண் மீது கார் மோதியது.

அரியன்கோடு பகுதியை சேர்ந்த பெண் ஒருவருக்கு அவரது கணவர் கார் ஓட்ட பயிற்சி அளித்து வந்துள்ளார். அவ்வழியாக பேருந்து ஒன்று வந்த போது அந்த பெண் பிரேக்கிற்கு பதிலாக ஆக்சிலேட்டரை அழுத்தியதாக கூறப்படுகிறது.

இதனால் சாலையோரம் நடந்து சென்ற பெண் மற்றும் அங்கு நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் மீது கார் மோதி நின்றது. பழகுநர் உரிமம் வைத்துள்ள அந்த பெண்மணி ஓட்டுநர் உரிமம் பெறுவதற்காக பயிற்சி பெற்று வந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.