புதுடில்லியில் திடீர் ஆலங்கட்டி கனமழை: விமானங்கள் திருப்பி விடப்பட்டன| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

புதுடில்லி: தலைநகர் டில்லியில் பல்வேறு இடங்களில் இன்று(மே 30) மாலை திடீரென ஆலங்கட்டி கனமழை பெய்தது.

latest tamil news

இக்கனமழையால் மரங்கள் பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. டில்லியின் கன்னாட் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த காரின் மீது மரம் விழுந்து சேதமானது.
மழையின் காரணமாக மோசமான வானிலை நிலவியதால் விமானங்கள் தரையிரங்க முடியாமல் சண்டிகர், லக்னோ, ஜெய்ப்பூர், அகமதாபாத், டேராடூன் ஆகிய நகரங்களுக்கு 8 விமானங்கள் திருப்பிவிடப்பட்டன.

latest tamil news

கனமழையால் சஞ்சார் பவன் பகுதியில் மரத்தின் கீழ் பேருந்து சிக்கியதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. திடீர் ஆலங்கட்டி மழை, வெய்யிலால் வாடி வதங்கிய டில்லி மக்களின் மனதை குளிர்ச்சியடைய செய்துள்ளது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.