உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் சம்பந்தப்பட்ட சந்தேக நபர்களிடம் மீண்டும் விசாரணை

ஈஸ்டர் ஞாயிறு அன்று நடத்தப்பட்ட தொடர் பயங்கரவாத தாக்குதல்களுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஐந்து சந்தேக நபர்களிடமும் மீண்டும் விசாரணை நடத்த வேண்டும் என்ற சட்டமா அதிபரின் உத்தரவிற்கு அமைய அந்த சந்தேக நபர்களை மூன்று மாதங்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் டீ. என். எல். மஹவத்தை நேற்று (30) உத்தரவிட்டுள்ளார்.

இதன்படி, காத்தான்குடியைச் சேர்ந்த ஆதம் லெப்பை அஹமட் அர்ஹம், முஹம்மட் ரபீக் ரிஸ்பான், முஹம்மது மொஹொமிதீன் முஹம்மது றிஸ்வான், அப்துல் அஸீஸ் ரியாசத் மற்றும் மட்டக்களப்பைச் சேர்ந்த ஆதம் பாவா யாகூப் ஆகியோரே விளக்கமறியலில் வைக்கப்பட்டு விசாரிக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 அடிப்படைவாதம் மற்றும் பயங்கரவாத செயற்பாடுகளுக்கு நிதியுதவி வழங்கியது தொடர்பாக சந்தேகநபர்கள் ஐந்து பேரும் காத்தான்குடி பொலிஸாரால் கைது செய்யப்பட்டு கடந்த 2019 மே மாதம் 11 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். பின்னர் அவர்கள் நீதிமன்றத்தினால் விளக்கமறியலில் வைக்கப்பட்டதுடன், பயங்கரவாதத் தடுப்பு விசாரணைப் பிரிவினர் நீதிமன்றில் சாட்சியங்களை சமர்ப்பித்திருந்தனர்.

சட்டமா அதிபரின் பணிப்புரையின் பேரில் சந்தேகநபர்கள் ஐவரும் நேற்று முன்தினம் (29) கைது செய்யப்பட்டதாக பயங்கரவாதத் தடப்பு விசாரணைப் பிரிவு நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.