அஸ்திரா எவுகணைகள் வாங்குவதற்கு ஒப்பந்தம் | Dinamalar

புதுடில்லி : விமானப்படை மற்றும் கடற்படைக்கு, ௩,௦௦௦ கோடி ரூபாய் மதிப்பில் ‘அஸ்திரா’ ஏவுகணைகளை கொள்முதல் செய்ய ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. ராணுவத்துக்கு தேவையான தளவாடங்களை. டி.ஆர்.டி.ஓ., எனப்படும் ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் தயாரித்து வருகிறது.

விண்ணில் பறந்து சென்று, எதிரி ஏவுகணையை விண்ணிலேயே இடை மறித்து தாக்கி அழிக்கும் திறன் கொண்ட, அஸ்திரா ஏவுகணையை டி.ஆர்.டி.ஓ., தயாரித்துள்ளது. ஒலியைக் காட்டிலும் வேகமாகச் செல்லக்கூடிய, அஸ்திரா ஏவுகணை 3.8 மீட்டர் நீளம் உடையது. இதன் எடை, 160 கிலோ.இந்த ஏவுகணையின் சோதனைகள் வெற்றிகரமாக நடத்தப்பட்டதையடுத்து, இதை ராணுவத்தில் சேர்க்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.இந்நிலையில், விமானப்படை மற்றும் கடற்படைக்கு ௩,௦௦௦ கோடி ரூபாய் மதிப்பில், அஸ்திரா ஏவுகணைகள் வாங்க, ராணுவ அமைச்சகம் ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.