காற்றாலை, சூரியசக்தி மூலம் தமிழகத்தில் மின் உற்பத்தி அதிகரிப்பு – செந்தில் பாலாஜி

தமிழகத்தில் காற்றாலை மற்றும் சூரியசக்தி மூலம் மின் உற்பத்தி அதிகரித்துள்ளதால், அனல் மின் நிலையங்களில் மின் உற்பத்தி குறைக்கப்பட்டுள்ளதாக  அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

கரூர் மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டத்திற்கு தலைமை தாங்கிய பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மூலம் தமிழகத்தில் உள்ள தொழிற்சாலைகளுக்கு தங்கு தடையின்றி மின்சாரம் வழங்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.