11 ஆம் வகுப்பு மாணவியை கத்தியால் குத்திவிட்டு ஓடிய வாலிபர் ரயில்முன் பாய்ந்து தற்கொலை?

திருச்சி: மணப்பாறை அருகே 11ம் வகுப்பு படிக்கும் மாணவியை கத்தியால் குத்திவிட்டு தப்பி  ஓடிய வாலிபரை காவல்துறையினர் தேடி வந்த நிலையில், அவர் ரயில்முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

மணப்பாறை அத்திகுளம் (எ) கீரைத்தோட்டம் பகுதியை சேர்ந்த 11ம் வகுப்பு படிக்கும் மாணவி,. திண்டுக்கல் ரோட்டில் உள்ள அரசு உதவிபெறும் பெண்கள் மேல்நிலை பள்ளியில் படித்து வருகிறார். நேற்று மாலை பள்ளியின் இறுதிதேர்வு முடிந்து வீடு நோக்கி நடந்து சென்ற மாணவியை வாலிபர் ஒருவர்,   மாணவியின் கழுத்து உட்பட பல இடங்களில் கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடியுள்ளார்.

இதைக்கண்ட அக்கம்பக்க்ததினர் மயங்கி விழுந்த மாணவியை  மீட்டு சிகிக்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் விரைந்து, மாணவியை குத்திய வாலிபரை தேடி வந்தனர். இந்த நிலையில், அந்த வாலிபர் திருச்சி அருகே ரயிலில் அடிபட்டு இறந்து கிடப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

அந்த வாலிபரை தேடி ந்த காவல்துறையினர் நள்ளிரவு  கீழ்பூசாரிபட்டி ரயில்வே கேட் அருகில் ஒருவர்  ரயிலில் அடிப்பட்டு கிடப்பதாக கிடைத்த தகவலைத் தொடர்ந்து, அங்கு சென்று பார்த்தபோது, அவர் வாலிபர் கேசவன் என்பது தெரிய வந்தது.

இதுகுறித்த விசாரணையின்போது, கடந்த ஒரு ஆண்டிற்கு முன்பு மண்ப்பாறை அருகே பொத்தமேட்டுப்பட்டி பகுதியை சேர்ந்த கேசவன் என்பவர் மாணவியை காதலித்ததாகவும், இது பிரச்சனையான நிலையில், அவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு, சில மாதங்களுக்கு முன்பு வெளியே வந்த நிலையில்,  பழிவாங்கும் நோக்கில் மாணவியை  கத்தியால் குத்தி கொலை செய்ய முயற்சி செய்தது  தெரியவந்துள்ளது. .  மாணவியை ஒருதலையாக கேசவன் காதலித்து வந்ததாகவும், அவரது காதலை மாணவி ஏற்க மறுத்ததால், அவரை  கொலை செய்துவிட்டு, தற்கொலை கொண்டதாக கூறப்படுகிறது.

கத்திக்குத்துப்பட்ட மாணவி தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.