கடன் வழங்கியதாக போலி ஆவணம் தயாரித்து, ரூ.97.37 லட்சம் மோசடி செய்த வங்கி பெண் மேலாளர்..!

வேலூர் அருகே, மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் வழங்கியதாக போலி ஆவணம் தயாரித்து 97 லட்சத்து 37 ஆயிரம் ரூபாய் மோசடி செய்த, கூட்டுறவு வங்கி பெண் மேலாளரை வணிக குற்றப்புலனாய்வு போலீசார் கைது செய்தனர்.

வேலூர் மாவட்டம் மத்திய கூட்டுறவு வங்கியின் குடியாத்தம் கிளையில், கடந்த 2018, 2019-ம் ஆண்டுகளில் மேலாளராக பணியாற்றிய உமாமகேஸ்வரி, மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் வழங்கியதாக போலி ஆவணங்கள் தயாரித்து மோசடியில் ஈடுபட்டுள்ளார். இதுதொடர்பான புகாரின்பேரில், உமா மகேஸ்வரியை போலீசார் கைது செய்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.