பிரெஞ்சு ஓபன் : நடப்பு சாம்பியன் ஜோகோவிச்சை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார் ரபேல் நடால்..!

பாரீஸ்,

‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடந்து வருகிறது.இந்நிலையில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு இடையே இன்று நடந்த கால்இறுதி ஆட்டம் ஒன்றில் பிரெஞ்சு ஓபனை 13 முறை வென்றவரான ரபெல் நடாலும் (ஸ்பெயின்) ,உலகின் ‘நம்பர் ஒன்’ வீரரும், நடப்பு சாம்பியனுமான நோவக் ஜோகோவிச்சும் (செர்பியா), மோதினர் .டென்னிஸ் உலகின் இரு நட்சத்திரங்கள் விளையாடுவதால் ரசிகர்களிடையே இந்த போட்டிக்கு பலத்த எதிர்பார்ப்பு ஏற்பட்டது .

பரபரப்பான இந்த ஆட்டத்தில் இருவரும் சம பலத்துடன் விளையாடினர் .விறுவிறுப்பான நடைபெற்ற ஆட்டத்தில் 6-2, 4-6, 6-2, 7-6 (7-4) என்ற செட் கணக்கில் ரபேல் நடால் வெற்றி பெற்று பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரின் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார் .


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.