கோவில் அருகே மது விற்பனைக்கு தடை – கவலையில் மதுப்பிரியர்கள்!

உத்தர பிரதேச மாநிலத்தில், அயோத்தி, மதுரா ஆகிய இடங்களில், கோவில்களை சுற்றியுள்ள பகுதிகளில், மதுபான விற்பனைக்கு அதிரடியாக தடை விதித்து, அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உத்தரவு பிறப்பித்து உள்ளார்.

உத்தர பிரதேச மாநிலத்தில், முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. அயோத்தியில், ராமர் கோவிலின் கருவறைக்கு முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அடிக்கல் நாட்டினாா்.

இந்நிலையில், உத்தர பிரதேச மாநிலத்தின் அயோத்தி மற்றும் மதுரா கோவில்களை சுற்றி உள்ள பகுதிகளில் மதுபான விற்பனைக்கு தடை விதித்து, முதலமைச்சர் யாேகி ஆதித்யநாத் உத்தரவு பிறப்பித்து உள்ளார். இது குறித்து மாநில அரசு சார்பிலும் அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

அதன்படி, அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயில் அருகிலும், மதுராவில் அமைந்து இருக்கும் கிருஷ்ண ஜென்மபூமி அருகிலும் மதுபான விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் அயோத்தியில் உள்ள மதுபான விற்பனை மையங்களுக்கு வழங்கப்பட்டு இருந்த உரிமமும் ரத்து செய்யப்பட்டு உள்ளது.

இந்த தடை உத்தரவு இன்று முதல் (ஜூன் 1 ஆம் தேதி) அமலுக்கு வந்தது. இதன் மூலம் அயோத்தி மற்றும் மதுரா பகுதிகளை சுற்றி அமைந்து இருக்கும் 37 மதுபான கடைகள் மூடப்பட்டு உள்ளன. மதுபான விற்பனையை நிறுத்தி விட்டு, பால் விற்பனை செய்ய மதுபான வியாபாரிகளுக்கு அம்மாநில அரசு பரிந்துரை வழங்கி இருக்கிறது. பால் பொருட்களுக்கு பெயர் பெற்ற பகுதி மதுரா என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.