நாடு விடுதலை பெற்ற 75வது ஆண்டை கொண்டாடும் காங்கிரஸ் கட்சி: தேச விடுதலை பேரணியில் பங்கேற்றவர்களுக்கு சோனியா பாராட்டு

டெல்லி:  நாடு விடுதலை பெற்ற 75வது ஆண்டை கொண்டாடும் வகையில் குஜராத்தில் காங்கிரஸ் கட்சி தொடங்கிய பேரணி டெல்லியில் காந்தி சமாதி சென்று அடைந்தது. குஜராத்தில் சபர்மதி ஆசிரமத்தில் ஏப்ரல் 6ம் தேதி தொடங்கிய விடுதலை கொண்டாட்ட பேரணி 3 மாநிலங்களை கடந்து டெல்லி காந்தி சமாதியில்  நிறைவு பெற்றது. இந்த நிகழ்ச்சியில் சோனியா காந்தி பங்கேற்று பேரணியில் பங்கேற்ற காங்கிரஸ் தொன்டகளுக்கு சான்றுதல் வழங்கி பாராட்டு தெரிவித்தார். தொடர்ந்து மூவர்ண கொடி உடன் அணிவகுத்து நின்ற காங்கிரஸ் தொண்டர்கள் வந்தே மாதரம் என்ற முழக்கம் எழுப்பினர். 42 நாட்களில் நடைபெற்ற பேரணியில் பங்கேற்றவர்கள் சுகந்திர போராட்டத்தில் பங்கேற்று நாடு சுகந்திரம் பெற காங்கிரஸ் தலைவர்கள் செய்த தியாகங்களை நினைவு கூர்ந்தனர். காங்கிரஸ் தொண்டர்கள் பேரணிக்கு ஆங்கங்கே திரண்டு அக்கட்சினர் வரவேற்ப்பு கொடுத்தனர்.     

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.