இமயமலையின் உச்சியில் தேசிய கீதம் பாடிய வீரர்| Dinamalar

புதுடில்லி : நாட்டின் 75வது சுதந்திர தின விழா கொண்டாட்டங்களை ஒட்டி, இமயமலை சிகரத்தின் உச்சியில் ஏறி நம் விமானப்படை வீரர் தேசிய கீதம் இசைத்தார்.

உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜில் உள்ள மத்திய விமானப்படையில் ‘விங் கமாண்டர்’ பொறுப்பு வகிப்பவர் விக்ராந்த் உனியால். மலை ஏற்றத்தில் சிறப்பு பயிற்சி பெற்றுள்ள இவர், நாட்டின் 75வது சுதந்திர தின விழாவை வித்தியாசமான முறையில் கொண்டாட முடிவு செய்தார்.

தன்னுடைய மலை ஏற்ற நண்பர்களுடன் சேர்ந்து நேபாளத்தின் காத்மாண்டுவில் இருந்து ஏப்ரல் 15ல் இமயமலையில் ஏற துவங்கினார். மே 21ல் இமயமலையின் உச்சியை அடைந்தார். அங்கு தேசிய கொடியை உயர்த்திப் பிடித்தபடி தேசிய கீதத்தை உரக்கப் பாடினார்.

நாட்டின் சுதந்திரத்திற்காக போராடி மக்கள் மத்தியில் பிரபலமாகாத அமைப்புகள் மற்றும் தலைவர்களுக்கு இந்த மலை ஏற்றத்தை சமர்ப்பிப்பதாக வீரர் விக்ராந்த் தெரிவித்தார்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.