சினிமாவுக்கு வரலைன்னா எப்பவோ கல்யாணம் செஞ்சு இருப்பேன்: ப்ரியா பவானி சங்கர்

சின்னத்திரையிலிருந்து மேயாதமான் படம் மூலம் சினிமாவுக்கு வந்தவர் பிரியா பவானி சங்கர். அதையடுத்து கடைக்குட்டிசிங்கம், மான்ஸ்டர், மாபியா என பல படங்களில் நடித்தவர் தற்போது யானை, பத்து தலை, திருச்சிற்றம்பலம், ருத்ரன், பொம்மை என பல படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறா. இந்த நிலையில் பிரியா பவனி சங்கர் அளித்த ஒரு பேட்டியில், எல்லா நடிகைகளையும் போலவே எனக்கும் ரஜினி, விஜய், அஜித் என்று முன்னணி ஹீரோக்களுடன் டூயட் பாட வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டுள்ளது. சினிமாவில் இன்னும் பெரிய இடத்துக்கு வர வேண்டும் என்பதால் நடிப்பில் தற்போது தீவிரம் காட்டிக் கொண்டிருக்கிறேன் என்று கூறியுள்ள பிரியா பவானி சங்கர், கல்லூரி படிப்பு முடித்ததும் திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆக வேண்டும் என்று தான் திட்டமிட்டிருந்தேன். ஆனால் எதிர்பாராதவிதமாக சினிமாவில் நடிக்கத் தொடங்கியதால் திருமணம் தள்ளிப் போய்விட்டது என்று கூறி உள்ளார் பிரியா பவானி சங்கர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.