சாலையில் நடந்து சென்ற எஸ்.ஐ., மனைவியிடம் நகை பறிக்க முயற்சி -24 மணி நேரத்திற்குள் கைது செய்த காவல்துறை

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் சாலையில் நடந்து சென்ற எஸ்.ஐ மனைவியிடம் நகையை பறிக்க முயன்ற கொள்ளையனை சிசிடிவிக் காட்சிகளை கொண்டு போலீசார் 24மணி நேரத்தில் கைது செய்தனர்.

செய்யாறு பகுதியைச் சேர்ந்த காவல் உதவி ஆய்வாளர் ராஜேந்திரனின் மனைவி அனுசியா, நேற்றிரவு திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற பின் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.

அவரை பின் தொடர்ந்து வந்த ஒருவன் அனுசியா அணிந்திருந்த 12 சவரன் தங்க நெக்லசை பறிக்க முயன்ற போது அது காதில் இருந்த கம்மலில் மாட்டிக்கொண்டதாக கூறப்படுகிறது. அதை இழுத்த வேகத்தில் அனுசியாவின் காது அறுந்த நிலையில் அவன் அங்கிருந்த தப்பினான்.

இதுகுறித்து சிகிச்சைக்கு பின் அனுசியா அளித்த புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீசார், வழிப்பறி கொள்ளையனை கைது செய்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.