கொச்சியில் தனியார் பேருந்துகளுக்கு கட்டுப்பாடுகளை விதித்த உயர்நீதிமன்றம்!

கொச்சியில் தனியார் பேருந்துகள் சாலையின் இடது ஓரத்தில் மட்டுமே செல்ல வேண்டும், ஒலி எழுப்பக் கூடாது, மற்ற வாகனங்களை முந்திச் செல்லக் கூடாது எனக் கேரள உயர் நீதிமன்றம் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே நிறுத்திப் பயணிகளை ஏற்றிச் செல்லும்படி போக்குவரத்துத்துறை கட்டுப்பாடு விதித்ததை எதிர்த்து ஆட்டோ உரிமையாளர்கள் கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், பயணிகளின் பாதுகாப்பைக் கருதித் தனியார் பேருந்துகளுக்குக் கட்டுப்பாடு விதித்ததுடன், இவை ஆட்டோக்களுக்கும் பொருந்தும் எனத் தெரிவித்தனர்.  

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.