வரலாறு காணாத விலை உயர்வு: இலங்கையாக மாறும் பாகிஸ்தான்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில், சமையல் எண்ணெய் மற்றும் நெய்யின் விலை வரலாறு காணாத வகையில் கடுமையாக உயர்ந்துள்ளது.

நம் அண்டை நாடான பாகிஸ்தான் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. அந்நாட்டின் ரூபாய் மதிப்பு கடந்த மாதம் முன் எப்போதும் இல்லாத வகையில் 7 சதவீதம் குறைந்தது. இது மேலும் கடும் வீழ்ச்சி அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. சர்வதேச நிதியம் மற்றும் நட்பு நாடுகளிடம் இருந்து கடனுதவி கேட்டு, பாக்., கோரிக்கை விடுத்து வருவதாக கூறப்படுகிறது.

latest tamil news

இந்நிலையில், சமையல் எண்ணெய் மற்றும் நெய் ஆகியவற்றின் விலையை வரலாறு காணாத வகையில் அந்நாட்டு அரசு நேற்று முதல் உயர்த்தியது. ஒரு லிட்டர் நெய்யின் விலை 208 ரூபாய் உயர்த்தப்பட்டு தற்போது லிட்டர் 605 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு லிட்டர் சமையல் எண்ணெயின் விலை 213 ரூபாய் உயர்த்தப்பட்டு, 555 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

நிலைமை இப்படியே போனால், இலங்கையை போல் பாகிஸ்தானும் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி, மீள முடியாத நிலைக்கு தள்ளப்பட அதிக வாய்ப்பு இருப்பதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.