`நாங்களே எங்கள் முடிவை தேடிக்கொள்கிறோம்’- திருமணத்தை மீறிய உறவில் இருவர் தற்கொலை

ஓட்டபிடாரம் அருகே விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட இருவரின் உடல்களை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே வெள்ளாரம் என்ற கிராமத்தைச் சேர்ந்த முருகேசன் என்பவரின் மகன் மயிலேறி (வயது 40). இவர் தூத்துக்குடி முத்தையாபுரம் டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு இந்திரா என்ற மனைவியும் மூன்று மகன்களும் உள்ளனர்.
image
இதேபோல் அதே கிராமத்தைச் சேர்ந்த செல்வமணி என்பவரின் மனைவி மகராசி (வயது 35). சேல்வமணி கடந்த ஓராண்டுக்கு முன்னர் தற்கொலை செய்து கொண்ட நிலையில், மகராசி கச்சேரி தளவாய்புரம் கிராமத்தில் உள்ள கிளை அஞ்சலக அலுவலகத்தில் போஸ்ட் மாஸ்டராக பணி புரிந்து வந்துள்ளார். இவருக்கு 2 மகன்கள் உள்ளனர்.
இந்நிலையில், செல்வமணி இறந்து சரியாக ஒராண்டு ஆன நிலையில், 28-5-22 அன்று மயிலேறி மற்றும் மகராசி ஆகிய இருவரும் ஊரை விட்டு வெளியேறி தலைமறைவாகினர். இதுபற்றி மயிலேறியின் மனைவி இந்திரா ஓட்டப்பிடாரம் போலீசில், தனது கணவர் மற்றும் மகராசி ஆகிய இருவரும் தலைமறைவாகி விட்டதாகவும் அவர்களை கண்டுபிடிக்கக் கோரி கடந்த 29-5-22 அன்று புகார் மனு அளித்திருந்தார்.
image
இதையடுத்து ஓட்டப்பிடாரம் அருகே வெள்ளாரம் கிராமத்திற்கு கிழக்கே உள்ள காட்டுப்பகுதியில் இறந்தவர்களின் உடல் கிடப்பதாக ஓட்டப்பிடாரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து போலீசார் அங்கு சென்று பார்த்தபோது, மயிலேறி, மகராசி ஆகிய இருவரும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இந்நிலையில், உடலை கைப்பற்றும் போது அவர்கள் இருவரும் கைப்பட எழுதிய கடிதத்தை போலீசார் கைப்பற்றியுள்ளனர். அதில் தங்கள் சாவுக்கு யாரும் காரணமில்லை என்றும், இந்த முடிவை தாங்களே தேடிக்கொண்டதாகவும், இதுதொடர்பாக யாரையும் விசாரணை செய்ய வேண்டாம் எனவும் எழுதி இருவரும் கையெழுத்திட்டுள்ளனர்.
இதனையடுத்து இறந்தவர்களின் உடல்களை தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார், வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.