கர்நாடகாவில் முன்விரோதம் காரணமாக முன்னாள் நகர மன்ற உறுப்பினர் வெட்டிக் கொலை.!

கர்நாடகா மாநிலம் ஹாசன் பகுதியில் முன்விரோதம் காரணமாக முன்னாள் நகர மன்ற உறுப்பினர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

ஹாசன் நகரைச் சேர்ந்த பிரசாந்த் என்பவர் ஜே.டி.எஸ் கட்சியில் முன்னாள் நகர மன்ற உறுப்பினராக இருந்தவர்.

இந்நிலையில், நேற்று அலுவலகப் பணி முடித்து வீடு திரும்பும் போது, பின் தொடர்ந்து வந்த மர்மகும்பல் அவரை வழிமறித்து சரமாரி வெட்டி தப்பிச் சென்றது. முன்விரோதம் காரணமாக இந்த கொலைச் சம்பவம் அரங்கேறி உள்ளதாக போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.