திருப்பதியில் கடந்த வாரம் ஏராளமான பக்தர்கள் குவிந்ததால் லட்டு தட்டுப்பாடு

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த வாரம் வார இறுதி நாட்களான வெள்ளி சனி ஞாயிற்றுக்கிழமைகளில் வரலாறு காணாத அளவில் பக்தர்கள் தரிசனத்திற்காக குவிந்தனர். பல்வேறு மாநிலங்களில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால் பக்தர்களின் கூட்டம் கட்டுக்கடங்காமல் அலைமோதியது.

இதன் காரணமாக பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து 48 மணி நேரத்திற்கு பிறகு தரிசனம் செய்தனர். கடந்த வாரம் வெள்ளிக்கிழமை 89, 318 பேர் தரிசனம் செய்தனர். 48, 639 பேர் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.3.76 கோடி உண்டியலில் காணிக்கையாக வசூலானது.

சனிக்கிழமை 90, 885 பேர் தரிசனம் செய்தனர். 35, 707 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர்.ரூ.4.18 கோடி உண்டியல் காணிக்கையாக வசூலானது. ஞாயிற்றுக்கிழமை 74, 823 பேர் தரிசனம் செய்தனர். 31,159 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். 4.51 கோடி உண்டியல் காணிக்கையாக வசூலானது.

கடந்த வாரம் 3 நாட்களில் மட்டும் 2 லட்சத்து 54 ஆயிரத்து 848 பக்தர்கள் தரிசனம் செய்தனர். தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு இலவசமாக ஒரு லட்டு வழங்கப்படுகிறது. தேவஸ்தானம் சார்பில் பக்தர்களுக்கு வழங்குவதற்காக தினமும் 3 லட்சம் லட்டுகள் தயார் செய்யப்பட்டு வருகிறது.

1 லட்டு ரூ 50 வீதம் பக்தர்களுக்கு எவ்வளவு லட்டு வேண்டுமென்றாலும் கூடுதலாக தேவஸ்தானம் சார்பில் வழங்கப்பட்டு வந்தது. கடந்த 3 நாட்களில் மட்டும் சராசரியாக 7 முதல் 8 லட்சம் வரை தினந்தோறும் லட்டு விற்பனையானது. இதனால் தற்போது லட்டு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு இலவசமாக ஒரு லட்டும், கூடுதலாக ரூ.50 விலையில் 2 லட்டுகள் மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது. கூடுதலாக லட்டு கேட்கும் பக்தர்களுக்கு லட்டு தட்டுப்பாடு உள்ளதால் 2 லட்டுகள் மட்டுமே வழங்கப்படும் என கூறுகின்றனர்.

திருப்பதியில் நேற்று 71,914 பேர் தரிசனம் செய்தனர். 37,234 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.4.39 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.