மது போதையில் தகராறு செய்தவர்கள் மீது லாரியை ஏற்றிக் கொன்ற வடமாநில ஓட்டுநர்

செங்குன்றம் அருகே மதுபோதையில் தகராறு செய்தவர்கள் மீது ஓட்டுநர் லாரி ஏற்றிக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அடுத்த வடபெரும்பாக்கம் பகுதியில் தனியாருக்குச் சொந்தமான லாரி பார்க்கிங் யார்டு செயல்பட்டு வருகிறது. இங்கு நேற்றிரவு அதே பகுதியைச் சேர்ந்த கமலக்கண்ணன் (36) குமரன் (34) நவீன் (25) ஆகியோர் மது அருந்திக் கொண்டிருந்தனர். அப்போது வடமாநில லாரி டிரைவர் லாரியை எடுக்க முயற்சி செய்துள்ளார்.
image
இது தொடர்பாக மூவருக்கும் வடமாநில லாரி டிரைவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது மது போதையில் இருந்த மூவரும், லாரி கண்ணாடியை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த வடமாநில லாரி ஓட்டுநர், மூவர் மீதும் லாரியை ஏற்றி விட்டு அங்கிருந்து தப்பி ஓட்டம் பிடித்தார்.
இதில், கமலக்கண்ணன் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் படுகாயங்களுடன் இருந்த குமரன், நவீன் ஆகிய இருவரை மீட்டு சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி குமரன் உயிரிழந்தார். நவீன் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
image
இதுகுறித்து தகவல் அறிந்த செங்குன்றம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் கண்ணையா லால் சிங், கிளீனர் கிரீஷ்குமார் ஆகிய இருவரையும் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மதுபோதையில் தகராறில் ஈடுபட்டவர்களை வடமாநில லாரி ஓட்டுநர் லாரி ஏற்றி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.