மும்பையில் சாலையில் சென்றவர்களை கத்தியால் தாக்கிய நைஜீரிய நாட்டவர்… போலீசார் விசாரணை!

மும்பை சர்ச்கேட் பகுதியில், சாலையில் சென்றவர்களை கத்தியால் கண்மூடித்தனமாகத் தாக்கிய நைஜீரிய நாட்டு நபரை போலீசார் கைது செய்தனர்.

டாடா பூங்கா அருகே சாலையோரம் அமர்ந்திருந்த 50 வயது மதிக்கத்தக்க நைஜீரிய நாட்டு நபர், திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் பாதசாரிகளை சரமாரியாகத் தாக்கத் தொடங்கினார்.

தகவல் அறிந்து விரைந்த போலீசார், அந்த நபரை மடக்கி பிடித்து, கத்தியை பறித்தனர்.

இதில் 8 பேர் காயமடைந்த நிலையில், ஒருவர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஜான் என்ற அந்த நபரிடம் தாக்குதலுக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.