கேரளாவில் பன்றிக் காய்ச்சலுக்கு 12 வயது சிறுமி பலி

திருவனந்தபுரம், : கேரளாவில் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 12  வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்.கேரள மாநிலம், கோழிக்கோடு அருகே உள்ள உள்யேரி பகுதியைச் சேர்ந்த  12 வயது சிறுமி காய்ச்சலால் பாதிக்கப்பட்டு கொயிலாண்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். நிலைமை மோசமானதை தொடர்ந்து உடனடியாக அந்த சிறுமியை கோழிக்கோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.அங்கு பரிசோதித்த போது அந்த சிறுமிக்கு பன்றிக்காய்ச்சல்  பரவியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று மாலை அந்த சிறுமி பரிதாபமாக இறந்தார்.அந்த சிறுமியின் தங்கைக்கும் நோய் பாதிக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. அவருக்கும் கோழிக்கோடு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.