ஆந்திரா வாட்ஸ் அப் குழுவில் வைரல் பச்சிளம் குழந்தை ₹3 லட்சத்துக்கு ஏலம்: 2 டாக்டர்கள் அதிரடி கைது

திருமலை: ஆந்திர மாநிலம், என்டிஆர் மாவட்டம், ஜி கோந்துரு மண்டலத்தைச் சேர்ந்த பதிவு செய்யப்பட்ட மருத்துவப் பயிற்சியாளர் மருத்துவர் ஆர்.எம்.பி. புஷ்பலதா, வாட்ஸ்அப் குழுவில் பிறந்து 3 நாட்களே ஆன பெண் குழந்தை ரூ3 லட்சத்திற்கு விற்பனைக்கு உள்ளதாக புகைப்படம் மற்றும் வீடியோவையும் பதிவிட்டுள்ளார். இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரில், அஜித்சிங் நகர் போலீஸ் நடத்திய விசாரணையில் அதிர்ச்சி தகவல் வெளியானது.ஆர்எம்பி புஷ்பலதா குழந்தையின் தாயான துர்காவின் பக்கத்து வீட்டுக்காரர்.  துர்காவிற்கு ஏற்கனவே இரண்டு மகன்கள் உள்ளனர்.  மூன்றாவது குழந்தையும் ஆண் குழந்தையாக பிறந்தால், தனது கணவர் ஏற்கமாட்டார். எனவே குழந்தையை தத்தெடுப்பதற்கு விட்டுவிடுவதாக துர்கா ஆர்எம்பி புஷ்பலதாவிடம் ஏற்கனவே கூறியிருந்ததாக கூறப்படுகிறது. ஆனால், துர்காவுக்கு பெண் குழந்தை பிறந்தது. இதை கவனிக்காமல் 3 நாளே ஆன பெண் குழந்தையை டாக்டர்கள், புஷ்பலாதா, அம்ருதாஆகியோர் விற்க முயற்சித்துள்ளனர். இருவரையும் போலீசார் கைது செய்தனர்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.