உயிரிழந்த தந்தை.. திருமண நாளில் மகள் செய்த காரியத்தால் உருக்கமான உறவினர்கள்.!

கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள திருக்கோவிலூர் அருகே ஒரு பெண் தனது தந்தை உயிரிழந்த காரணத்தால் அவருடைய மெழுகு சிலைக்கு முன்பாக திருமணம் செய்து இருக்கின்றார். 

சென்ற வருடம் அந்தப் பெண்ணின் தந்தை செல்வராஜ் உயிரிழந்த நிலையில், அவருடைய இளைய மகள் மகேஸ்வரி மற்றும் திருக்கோவிலூர் பகுதியைச் சேர்ந்த ஜெயராஜ் என்ற மணமக்களுக்கு இன்று திருமணம் நடந்தது. 

தந்தை உயிருடன் இல்லை என்ற காரணத்தால் தனது தந்தைக்கு முன்பு திருமணம் செய்ய வேண்டும் என்ற ஆசையில் ரூபாய் 5 லட்சம் மதிப்பில் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்ட செல்வராஜின் சிலைக்கு முன்பு மகேஸ்வரி இன்று திருமணம் செய்து கொண்டார். 

இது உறவினர்கள் மத்தியில் உருக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.