குஜராத் கடலில் வீசப்பட்ட பாக்., போதை பொருள்| Dinamalar

ஆமதாபாத் : குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் உள்ள கடல் முகத்துவாரப் பகுதியில், 50 கிலோ எடையில், 49 ‘ஹெராயின்’ போதைப்பொருள் பொட்டலங்களை, எல்லை பாதுகாப்பு படை மற்றும் உள்ளூர் போலீசார் நேற்று முன் தினம் கண்டெடுத்தனர்.இந்த போதைப்பொருட்கள் பாக்.,கில் இருந்து கப்பலில் கடத்தி வரப்படும்போது, கடற்படை ரோந்துக்கு பயந்து கப்பலின் கேப்டன் அதை கடலில் வீசி எறிந்து உள்ளார்.

கடந்த மாதம் 30ல், குஜராத் கடல் பகுதியில் ஏழு பாகிஸ்தானியர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் தான் இந்த ஹெராயின் பொட்டலங்களை கடத்தி வந்து கடலில் வீசியது விசாரணையில் தெரியவந்தது.இவர்களிடம் போதை பொருட்களை பெற இருந்த நம் நாட்டு கடத்தல்காரர்கள் குறித்த தகவல்களை பயங்கரவாத தடுப்பு பிரிவினர் விசாரித்து வருகின்றனர்.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.