உயிர்காக்கும் மருந்து இலங்கைக்கு உதவி| Dinamalar

கொழும்பு : கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கைக்கு உயிர் காக்கும் மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை இந்தியா வழங்கியது.

நம் அண்டை நாடான இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. இதையடுத்து இந்தியாவில் இருந்து அரிசி பால் பவுடர் மருந்துகள் மீனவர்களுக்கு டீசல் உள்ளிட்டவை அனுப்பி வைக்கப்பட்டன.இந்நிலையில் அம்பந்தோட்டா யாழ்ப்பானம் கிளிநொச்சி வவுனியா ஆகிய இடங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு உயிர்காக்கும் மருந்துகள் மருத்துவ உபகரணங்களை இந்திய துணைத் தூதரக அதிகாரிகள் நேற்று வழங்கினர்.தமிழக அரசு சார்பிலும் 40 ஆயிரம் டன் அரிசி மற்றும் 500 டன் பால் பவுடர் உள்ளிட்ட பலபொருட்கள் இலங்கைக்கு ஏற்கனவே அனுப்பிவைக்கப்பட்டன.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.