இலங்கைக்கான முன்னாள் குவைத் தூதுவர் அப்துல்லாஹ் நாஸர் அல்-ஸனூஸி காலமானதையடுத்து அவருக்கு அனுதாபம் தெரிவிக்க ஏற்பாடு

கொழும்பு குவைத் தூதரகத்தில் 2002ம் ஆண்டு முதல் 2005ம் ஆண்டு வரையான காலப்பகுதியில் இலங்கைக்கான குவைட் தூதுவராக பணியாற்றிய கௌரவ அப்துல்லாஹ் நாஸர் அல்-ஸனூஸி அவர்கள் 01.06.2022ம் திகதி குவைட் நாட்டில் காலமானார்.

இலங்கைக்கும் இலங்கை மக்களுக்கும் அளப்பரிய சேவைகளை செய்த இலங்கைக்கான முன்னாள் குவைத் தூதுவர் அப்துல்லாஹ் நாஸர் அல்-ஸனூஸி காலமானதையடுத்து கொழும்பிலுள்ள குவைத் தூதரகத்தில் திங்கள் முதல் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை அவருக்கான அனுதாபம் தெரிவிப்பதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கொழும்பிலுள்ள குவைத் தூதரகம் தெரிவித்துள்ளது.

Fawaz Anbiya

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.