நண்பர்களுடன் குளிக்கச் சென்ற பள்ளி மாணவன் கண்மாயில் மூழ்கி உயிரிழப்பு

சாத்தூர் அருகே கண்மாயில் மூழ்கி பள்ளி மாணவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே சடையம்பட்டியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் என்பவரின் மகன் சங்கர் (17). 11-ஆம் வகுப்பு படித்து வரும் இவர், தனது நண்பர்களுடன் சடையம்பட்டி அருகில் உள்ள கண்மாய்க்கு குளிக்கச் சென்றுள்ளனர்.
image
அப்போது ஆழமான பகுதிக்கு சென்ற சங்கர் நீரில் மூழ்கியுள்ளார். இதையடுத்து அவரது நண்பர்கள் தண்ணீரில் மூழ்கிய சங்கரை தேடியும் கிடைக்காததால் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
image
இதையடுத்து தகவலின் பேரில் அங்கு வந்த சாத்தூர் தீயணைப்புத் துறையினர் 6மணி நேரம் போராடி சங்கரின் உடலை மீட்டு சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து சாத்தூர் தாலூகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.