அமைச்சர்கள் சம்பளம் இன்றி பணியாற்ற தீர்மானம்

அமைச்சர்கள் சம்பளம் இன்றி, எதிர்வரும் ஒரு வருட காலத்திற்கு பணியாற்றத் தீர்மானித்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான பிரதமர் ரணில் விக்கிரமசிங்கசமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளதாகவும் அமைச்சர் கூறினார்

கொழும்பில் இன்று(7) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போது கருத்து தெரிவித்த அமைச்சர் பந்துல குணவர்தன, நாட்டின் நிலைமையை கருத்தில் கொண்டு பிரதமர் விக்ரமசிங்கவினால் இந்த பிரேரணை முன்வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

தற்போது அரசாங்கத்தின் நாளாந்த வருமானம் 2000 ரூபாவாகும் எனவும் மேலும் அரச செலவினங்களை குறைக்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அமைச்சர் கூறினார்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.