#தமிழகம் || அரங்கேறிய கொடூர கொலை., அதிமுக-திமுக நிர்வாகிகள் கூட்டு சதி அம்பலம்.! கைது செய்து சிறையில் அடைத்த போலீசார்.!

சிவகாசியில் நடைபெற்ற கொலை வழக்கில், அதிமுக மற்றும் திமுகவை சேர்ந்த நிர்வாகிகள் கைது செய்யப்பட்டு இருப்பது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சிவகாசியில் கடந்த 2020 ஆம் ஆண்டு நவநீத கிருஷ்ணன் என்பவர் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவத்திற்கு பழிக்குப்பழியாக கடந்த மார்ச் மாதம் அரவிந்தன் என்பவர் படுகொலை செய்யப்பட்டார்.

இந்த வழக்கில் ஏற்கனவே 10 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், சிவகாசி ஒன்றியம், ஆணையூர் ஊராட்சி மன்றத் தலைவரும், அதிமுக நிர்வாகியுமான லட்சுமி நாராயணனுக்கு தொடர்பு இருப்பதாக போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

தொடர்ந்து, அதிமுக நிர்வாகி லட்சுமி நாராயணன், திமுக நிர்வாகி பிரவின், அந்தோணிராஜ் உட்பட 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

மேலும் அவர்களை இரவோடு இரவாக விருதுநகர் மாவட்ட சிறையில் அடைத்தனர். பழிக்குப் பழியாக நடந்த கொலை சம்பவத்தில் அதிமுக மற்றும் திமுக நிர்வாகிகள் கைது செய்யப்பட்டதால் சிவகாசியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.