லக்னோ பாஜக அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. புதுக்கோட்டையை சேர்ந்த ராஜா முகமது என்பவர் கைது.!

உத்தர பிரதேசத்தின் லக்னோவில் உள்ள பாஜக அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த புகாரில் அம்மாநில காவல்துறையினர் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவரை கைது செய்தனர்.

திருக்கோகர்ணத்தை சேர்ந்த ராஜா முகமது என்பவர், உத்தர பிரதேச காவல்துறையினருக்கு வாட்ஸ் அப் மூலம் மிரட்டல் விடுத்துள்ளார்.

இதனை அடுத்து விசாரணை நடத்திய போலீசார், ராஜா முகமதுவை கைது செய்து திருக்கோகர்ணம் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தினர்.

விசாரணைக்காக அவரை உத்தர பிரதேசத்திற்கு அழைத்துச் செல்ல அம்மாநில போலீசார் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.