கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட இளைஞர்.. காவல்துறையினர் விசாரணை..!

கிணற்றில் வாலிபர் பிணமாக மிதந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள கிணற்றில் 35 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் பிணமாக கிடந்துள்ளார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த பகுதி மக்கள் உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளித்தனர். தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் தீயணைப்பு துறையினர் உதவியுடன் அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறை இறந்தவர் யார் அவர் எந்த ஊரை சேர்ந்தவர் அவர் கொலை செய்யப்பட்டாரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என்று கோணத்திலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.