தமிழக அரசின் அன்பளிப்பு உலர் உணவு பொதிகள் காத்தான்குடி பிரதேச செயலக பிரிவிற்கு..

தமிழ் நாட்டிலிருந்து அன்பளிப்பாக கிடைக்கப் பெற்ற உலர் உணவுப் பொதிகளை, காத்தான்குடி பிரதேச செயலப் பிரிவில் வழங்கும் நிகழ்வு இன்று (07) திகதி இடம்பெற்றது.

காத்தான்குடி பிரதேச செயலாளர் யூ.உதயசிறிதர் தலைமையில் உலர் உணவுப் பொதிகள் வழங்கபட்டன. இதன்போது பிரதேச செயலகத்தின் கிராம உத்தியேமாகத்தர்களுக்கான நிருவாக உத்தியோகத்தர் எம்.எம்.எம்.யறூப் உள்ளிட்ட பிரதேச செயலக உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டு உலர் உணவுப்
பொதிகளையும் வழங்கினர்.

காத்தான்குடி பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட 18 கிராம உத்தியோகத்தர் பிரிவிலும் வறுமைக் கோட்டுக்கு உட்பட்ட பயனாளிகளுக்கே உலர் உணவுப் பொதிகள் முதற்கட்டமாக வழங்கப்பட்டன. முதற்கட்டமாக காத்தான்குடி பிரதேச செயலக பிரிவிற்கு 3100 நிவாரணப் பொதிகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக காத்தான்குடி பிரதேச செயலாளர் யூ.உதயசிறிதர் இதன்போது குறிப்பிட்டார்.

மட்டக்களப்பு மாவட்டத்திற்கென முதற்கட்டமாக கிடைக்கப்பெற்றுள்ள 50000 பக்கட் அரிசி மற்றும் 3750 பக்கட் பால்மா என்பனவற்றை மாவட்டத்தின் 14 பிரதேச செயலகப் பிரிவிற்கும் முன்னுரிமையடிப்படையில் மாவட்ட செயலகத்தினால் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.