4 வயது சிறுமிக்கு சூடு; சித்தியிடம் விசாரணை| Dinamalar

கலபுரகி : கலபுரகி வாடியைச் சேர்ந்தவர் திப்பண்ணா, 35. இவரின் முதல் மனைவி உடல்நலம் பாதிக்கப்பட்டு இறந்தார். இவர்களுக்கு சோனலிகா, 4, என்ற பெண் குழந்தை உள்ளது. மாரேம்மா, 25, என்பவரை திப்பண்ணா, இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார்.திப்பண்ணா, மஹாராஷ்டிராவில் வேலை பார்க்கிறார். இதை பயன்படுத்தி, சோனலிகாவை மாரேம்மா தினமும் சித்ரவதை செய்வதாக, அக்கம், பக்கத்தினர் திப்பண்ணாவிடம் தெரிவித்தனர்.கடந்த 6ம் தேதி, பசிக்கு உணவு கேட்ட குழந்தையின் இரு கைகளிலும், ஈவு இரக்கமின்றி, இரும்பு கம்பியால் சூடு வைத்துள்ளார்.

குழந்தை வலியால் துடித்து, பக்கத்துக்கு வீட்டுக்கு சென்று தஞ்சமடைந்தது. இதனால் கோபமடைந்த அக்கம் பக்கத்தினர், மாரேம்மாவை கண்டித்தனர்.இது குறித்து, போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. மாரேம்மாவிடம் போலீசார் விசாரிக்கின்றனர். காயமடைந்த குழந்தை சோனலிகாவுக்கு, அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.