கலபுரகி : கலபுரகி வாடியைச் சேர்ந்தவர் திப்பண்ணா, 35. இவரின் முதல் மனைவி உடல்நலம் பாதிக்கப்பட்டு இறந்தார். இவர்களுக்கு சோனலிகா, 4, என்ற பெண் குழந்தை உள்ளது. மாரேம்மா, 25, என்பவரை திப்பண்ணா, இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார்.திப்பண்ணா, மஹாராஷ்டிராவில் வேலை பார்க்கிறார். இதை பயன்படுத்தி, சோனலிகாவை மாரேம்மா தினமும் சித்ரவதை செய்வதாக, அக்கம், பக்கத்தினர் திப்பண்ணாவிடம் தெரிவித்தனர்.கடந்த 6ம் தேதி, பசிக்கு உணவு கேட்ட குழந்தையின் இரு கைகளிலும், ஈவு இரக்கமின்றி, இரும்பு கம்பியால் சூடு வைத்துள்ளார்.
குழந்தை வலியால் துடித்து, பக்கத்துக்கு வீட்டுக்கு சென்று தஞ்சமடைந்தது. இதனால் கோபமடைந்த அக்கம் பக்கத்தினர், மாரேம்மாவை கண்டித்தனர்.இது குறித்து, போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. மாரேம்மாவிடம் போலீசார் விசாரிக்கின்றனர். காயமடைந்த குழந்தை சோனலிகாவுக்கு, அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கலபுரகி : கலபுரகி வாடியைச் சேர்ந்தவர் திப்பண்ணா, 35. இவரின் முதல் மனைவி உடல்நலம் பாதிக்கப்பட்டு இறந்தார். இவர்களுக்கு சோனலிகா, 4, என்ற பெண் குழந்தை உள்ளது. மாரேம்மா, 25, என்பவரை திப்பண்ணா,
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.