ரெப்போ வட்டி விகிதம் மேலும் 0.40 சதவிகிதம் உயர்வு! ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்ததாஸ்

மும்பை: இந்திய ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை மேலும் 0.40 சதவிகிதம் உயர்த்தியுள்ளதாக அதன் தலைவர் சக்தி காந்ததாஸ் அறிவித்து உள்ளார்.  அதன்படி, வங்கிகளுக்கு வழங்கும் குறுகிய கால கடனுக்கான வட்டி விகிதத்தை 4 சதவிகிதத்தில் 4.40 சதவிகிதமாக உயர்த்தப்பட்டுள்ளது.

ரிசர்வ்வங்கியின் நிதிக்கொள்கைக் கூட்டம் மும்பையில் கடந்த 2நாள்களாக நடைபெற்று வந்தது. இதையடுத்து, இன்று காலை செய்தியாளர் களை சந்தித்த சக்திகாந்ததாஸ், வங்கி கடனுக்கான வட்டி விகிதம் (ரெப்போ) 0.5 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும்,  வட்டி விகிதம் 0.5 சதவீதம் உயர்வு மூலம் வங்கிகளின் குறுகிய கால கடன் வட்டி விகிதம் 4.5 சதவீதமாக அதிகரித்துள்ளது.

இந்த கூட்டத்தில் வங்கி கடனுக்கான வட்டி விகிதங்களை உயர்த்த வாய்ப்புள்ளதாக கூறப்பட்ட நிலையில், 0.5 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது நாட்டில் பணவீக்கம் விகிதம் தொடர்ந்து அதிகரித்து வருவதை அடுத்து அதை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக வங்கி கடனுக்கான வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி உயர்த்தியுள்ளது.  இது உடனடியாக அமலுக்கு வருவதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் அறிவித்துள்ளார். இதன் விளைவாக, நிலையான வைப்புத்தொகை வசதி 4.65 சதவீதம் ஆகவும், விளிம்பு நிலை வசதி மற்றும் வங்கி விகிதம் 5.15சதவீதமாக மாற்றி அமைக்கப் பட்டுள்ளது. வங்கி வட்டிக்கான வட்டி விகிதத்தை உயத்தியதை அடுத்து வீடு, வாகனம், தனிநபர் கடன்களுக்கான வட்டி விகிதம் அதிகரிக்கிறது.

கூட்டுறவு வங்கிகளுக்கு கூடுதல் அதிகாரம்: வணிகரீதியில் வீடு கட்டி விற்கும் ரியல் எஸ்டேட் நிறுவனங்களுக்கு கடன் வழங்க ஊரக கூட்டுறவு வங்கிகளுக்கு கூடுதல் கடன் வழங்கும் அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. மே 31 ஆம் தேதி தேசிய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்ட தற்காலிக மதிப்பீடுகளின்படி, 2021-22 ஆம் ஆண்டில் இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 8.7சதவீதம் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது 2021-22ல் இந்த உண்மை யான மொத்த உள்நாட்டு உற்பத்தியின் அளவு தொற்றுநோய்க்கு முந்தைய அளவை விட அதிகமாக உள்ளது. மேலும், இந்தியாவின் பொருளாதாரம் நிலையாக இருந்து வருகிறது. அதன் வளர்ச்சிக்கு ரிசர்வ வங்கி உறுதுணையாக இருக்கும்.

2022-23 ஆம் நிதியாண்டில் முதல் மூன்று காலாண்டுகளில் பணவீக்கம் 6.7 சதவீதத்துக்கு மேல் அதிகரிக்கும் என்றும், நாட்டின் பொருளாதார வளர்ச்சி நடப்பு நிதியாண்டில் 7.2 சதவீதமாக இருக்கும் என்று ரிசர்வ் வங்கி கணித்துள்ளது என  சக்திகாந்த தாஸ் கூறியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.