ஞானவாபி மசூதி வழக்கை விசாரித்து வரும் நீதிபதிக்கு கடிதம் வழியாக மிரட்டல்

ஞானவாபி மசூதி வழக்கை விசாரித்து வரும் நீதிபதிக்கு மிரட்டல் கடிதம் எழுதப்பட்டுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் புகழ்பெற்ற காசி விஸ்வநாதர் கோயிலுக்கு அருகில் உள்ள ஞானவாபி மசூதியில் இந்து கடவுள்களின் உருவங்கள் மற்றும் சிலைகள் இருப்பதாகவும், அதனை வழிபடுவதற்கு அனுமதிக்க வேண்டும் எனக் கூறி இந்து அமைப்புகள் சார்பில் வாரணாசி கீழமை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த விவகாரம் உச்சநீதிமன்றம் வரை வந்து தற்போது வாரணாசி மாவட்ட நீதிபதி ரவிக்குமார் திவாகர் அமர்வில் விசாரிக்கப்பட்டு வருகிறது.
image
இந்நிலையில் நீதிபதிக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் இஸ்லாமிய அமைப்பை சேர்ந்த ஒருவர் சார்பில் கடிதம் அனுப்பப்பட்டது. இந்த கடிதத்தை காவல் ஆணையரக்கு அனுப்பிவைத்த நீதிபதி, கடிதம் தொடர்பாக விசாரணை நடத்த அறிவுறுத்தி உள்ளார். மேலும் நீதிபதிக்கு காவல் துறை சார்பாக  9 போலீஸார்கள் கொண்ட பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க… தூத்துக்குடி: வீட்டின் வெளியே படுத்திருந்த லாரி டிரைவர் கழுத்தறுத்துக் கொலைSource : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.